ராமாயணம் திரைப்படத்தில் அசாம் நடிகை சுரபிதா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா படமாக மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ’ராமாயணம்’ திரைப்படம். பல மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ராமனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும், ராவணனாக கன்னட நடிகர் யாஷ்-ம் நடித்து வருகின்றனர்.
நிதேஷ் திவாரி இயக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் ராமனின் தம்பி லட்சுமணன் மனைவி ஊர்மிளாவாக அசாம் நடிகை சுரபி தாஸ் நடிக்கவுள்ளார். 27 வயதான சுரபி தாஸ் ராமாயணம் படத்தில் நடிக்க இருப்பதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ரன்பீர் கபூரை விட சாய் பல்லவியுடன் தான் படப் பிடிப்பில் அதிக நேரம் செலவிட்டேன். அவர் மிகவும் நல்லவர். இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.