Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»1200 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி
    சினிமா

    1200 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025Updated:November 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Picsart 25 11 18 09 52 31 819
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த வார சனிக்கிழமை ( நவம்பர் 15 ) எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவர இயக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு வெளியானது. எஸ் எஸ் ராஜமவுலி என்றாலே பிரம்மாண்டம் தான். இந்த முறை அவரது அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிடுவதிலேயே நமக்கு பிரம்மாண்டத்தை காண்பித்து விட்டார்.

    130 அடி உயர எல் இ டி ஸ்கிரீன்களை செட் செய்து ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சுமார் 27 கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.மகேஷ் பாபு பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவ்விழாவில் இம்மூவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Picsart 25 11 18 09 54 21 296

    பிரித்திவிராஜ் சுகுமாரன் கும்பா என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். மந்தாகினி என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாகவும் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

    படத்தின் தலைப்பு “வாரணாசி”.சுமார் 3 நிமிடம் 41 நொடி நீளமுள்ள படத்தின் தலைப்பு வீடியோவை 130 அடி உயர எல்இடி ஸ்க்ரீன்களில் திரையிட்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். வீடியோவில் ஆதிகாலம் தொட்டு நிகழ்காலம் வரை கதையின் சூழல் இருக்கப் போகிறது என்று நமக்கு காண்பித்துள்ளனர்.

    விழாவில் ராஜமவுலி பேசுகையில், “எனக்கு மகாபாரதம் மற்றும் ராமாயணம் மிகவும் பிடிக்கும். இத்திரைப்படத்தில் ராமாயணத்தில் வரும் ஒரு சில காட்சி அமைப்புகளை படமாக்கி இதில் மகிழ்ச்சி கொண்டேன். மகேஷ் பாபுவை ராம அவதாரத்தில் பார்த்தபொழுது எனக்கு புல்லரித்துவிட்டது. மகேஷ் பாபுவை ராம அவதாரத்தில் வைத்து இயக்கிய நாட்கள் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

    பின்னர் மகேஷ் பாபு, “இது வெறும் படத்தின் தலைப்பு வெளியிடும் விழா மட்டுமே. அப்படி என்றால் இனி என்னென்ன விஷயங்கள் எப்படி நடக்கப் போகிறது என்பதை உங்கள் வியூகத்திற்கு விட்டு விடுகிறேன். ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன் வாரணாசி திரைப்படம் வெளியாகும் பொழுது இந்தியாவே பெருமைப்படும்” என்று கூறியுள்ளார்.

    படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகும் என்று விழாவில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இத்திரைப்படம் சுமார் 1200 முதல் 1300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக இத்திரைப்படம் ப்ரீமியம் லார்ஜ் ஸ்கேல் ஐ மேக்ஸ் ( premium largest scale IMAX format 1.43 ) வடிவத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    20251118 094704

     

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதெ.ஆப்., எதிரான முதல் டெஸ்ட் படுதோல்வி: கங்குலி கருத்து
    Next Article 22 வருடங்கள் கழித்து மீண்டும் மார்க்கெட்டில் களமிறங்கும் டாட்டாவின் சியரா SUV
    Editor TN Talks

    Related Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    December 26, 2025

    மிடில் கிளாஸ்’ முதல் ‘ரிவால்வர் ரீட்டா’ வரை.. இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.