Close Menu
    What's Hot

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»1200 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி
    சினிமா

    1200 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025Updated:November 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Picsart 25 11 18 09 52 31 819
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த வார சனிக்கிழமை ( நவம்பர் 15 ) எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவர இயக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு வெளியானது. எஸ் எஸ் ராஜமவுலி என்றாலே பிரம்மாண்டம் தான். இந்த முறை அவரது அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிடுவதிலேயே நமக்கு பிரம்மாண்டத்தை காண்பித்து விட்டார்.

    130 அடி உயர எல் இ டி ஸ்கிரீன்களை செட் செய்து ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சுமார் 27 கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.மகேஷ் பாபு பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவ்விழாவில் இம்மூவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Picsart 25 11 18 09 54 21 296

    பிரித்திவிராஜ் சுகுமாரன் கும்பா என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். மந்தாகினி என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாகவும் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

    படத்தின் தலைப்பு “வாரணாசி”.சுமார் 3 நிமிடம் 41 நொடி நீளமுள்ள படத்தின் தலைப்பு வீடியோவை 130 அடி உயர எல்இடி ஸ்க்ரீன்களில் திரையிட்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். வீடியோவில் ஆதிகாலம் தொட்டு நிகழ்காலம் வரை கதையின் சூழல் இருக்கப் போகிறது என்று நமக்கு காண்பித்துள்ளனர்.

    விழாவில் ராஜமவுலி பேசுகையில், “எனக்கு மகாபாரதம் மற்றும் ராமாயணம் மிகவும் பிடிக்கும். இத்திரைப்படத்தில் ராமாயணத்தில் வரும் ஒரு சில காட்சி அமைப்புகளை படமாக்கி இதில் மகிழ்ச்சி கொண்டேன். மகேஷ் பாபுவை ராம அவதாரத்தில் பார்த்தபொழுது எனக்கு புல்லரித்துவிட்டது. மகேஷ் பாபுவை ராம அவதாரத்தில் வைத்து இயக்கிய நாட்கள் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

    பின்னர் மகேஷ் பாபு, “இது வெறும் படத்தின் தலைப்பு வெளியிடும் விழா மட்டுமே. அப்படி என்றால் இனி என்னென்ன விஷயங்கள் எப்படி நடக்கப் போகிறது என்பதை உங்கள் வியூகத்திற்கு விட்டு விடுகிறேன். ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன் வாரணாசி திரைப்படம் வெளியாகும் பொழுது இந்தியாவே பெருமைப்படும்” என்று கூறியுள்ளார்.

    படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகும் என்று விழாவில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இத்திரைப்படம் சுமார் 1200 முதல் 1300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக இத்திரைப்படம் ப்ரீமியம் லார்ஜ் ஸ்கேல் ஐ மேக்ஸ் ( premium largest scale IMAX format 1.43 ) வடிவத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    20251118 094704

     

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதெ.ஆப்., எதிரான முதல் டெஸ்ட் படுதோல்வி: கங்குலி கருத்து
    Next Article 22 வருடங்கள் கழித்து மீண்டும் மார்க்கெட்டில் களமிறங்கும் டாட்டாவின் சியரா SUV
    Editor TN Talks

    Related Posts

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    June 25, 2026

    “3 ஆண்டுகளாக நோயால் போராடுகிறேன்…” – நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.