அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கி உள்ளதை பலமுறை பிளாப் ஆன படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் எடுபடாது என்பது போன்றது என குறிப்பிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர்கள் தொடர்ந்து இப்படி பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மக்கள் தீர்ப்பை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் திமுக நன்றாக இருக்கும் என்றும் தொடர்ந்து அவர்கள் அப்படியே பேசட்டும் என பதில் அளித்தார்.

அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அது ஜனநாயக உரிமை என்றார். ஆனால், எந்த கறை  வேண்டுமானாலும் மக்கள் விட்டு விடுவார்கள், ஆனால் பாஜக கறை,  படிந்த இயக்கமாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பாஜக பல இடங்களில் முயற்சி செய்து தோற்றநிலையில், இப்போது புதிய முயற்சி எடுத்து இருப்பதாகவும், ஹிட்டான படம் ரீ ரிலீஸ் ஆனால் ஒரு சிலரது படம் மட்டும்தான் மக்கள் பார்க்க வருவார்கள் என்றும் ஏற்கனவே பலமுறை பிளாப் ஆன படம் மக்களிடம் எடுபடாது என்று தோல்வி நிச்சயம் என்றும் விமர்சித்தார். யாரெல்லாம் பாஜகவிற்கு வாக்களித்தார்களோ, அந்த வலது சாரி சிந்தனையாளர்கள் தற்போது ஒன்றினைந்து இருப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version