வங்கக்கடலின் வடபகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை சுமார் 1,500 கிலோமீட்டர் நீளத்திற்கு பருவமழை தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த பிரம்மாண்டமான மழை மேகக் கூட்டத்தை INSAT-3DS செயற்கைக்கோள் தெளிவாகப் படம் பிடித்துள்ளது.

பருவமழையின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்த தாழ்வுப்பகுதி, இதுவரை இமயமலை அடிவாரத்தை ஒட்டியே இருந்தது. இதனால் சமவெளிப் பகுதிகளான டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை கடும் வெப்பத்தில் தகித்தன. ஆனால், தற்போது இந்தத் தாழ்வுப்பகுதி தெற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், ஜூலை 1 முதல் ஜூலை 4-க்குள் வட இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது.

இந்த வார இறுதியில் வங்கக் கடலில் உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, பருவமழையின் வேகத்தை மேலும் அதிகரிக்கும். இதனால், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திங்கள்கிழமை நிலவரப்படி டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் 42°C வெப்பம் பதிவாகியது. கடும் வெப்பமும், அதே நேரத்தில் ஈரப்பதமும் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த புதிய பருவமழை மாற்றத்தால், ஜூலை முதல் வாரத்தில் வட இந்தியாவிற்குப் பெரும் வெப்பத் தணிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version