ஐரோப்பிய நாடுகளில் புதிய வாழ்வை தேடி மத்திய தரைக்கடலைக் கடக்க முயலும் அகதிகளுக்கு, லிபியா தொடக்கப் புள்ளயாக உள்ளது. கடந்த 2011ல் நேட்டோ ஆதரவு பெற்ற புரட்சியின் மூலம் லிபியாவின் நீண்டகால அதிபரான கடாபி வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார்.
அதன்பின்னர், அங்கு நிலவி வரும் அரசியல் குழப்பங்களையும் உள்நாட்டுக் கலவரங்களையும் கடத்தல்காரர்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக ஓடிவரும் அகதிகளை ஐரோப்பாவிற்கு அனுப்பும் முக்கிய மையமாக லிபியாவை மாற்றியுள்ளனர்.
அதிக பணத்தைப் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற மற்றும் மிகவும் பலவீனமான சிறிய படகுகளில் நூற்றுக்கணக்கான அகதிகளை அடைத்து அனுப்புகின்றனர். இதனால் கடல் பயணத்தின்போது அடிக்கடி விபத்துகள் நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். அந்த வகையில்,
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நாள்தோறும் அகதிகள் வருவது உண்டு. அந்த வகையில், சுமார் 60 அகதிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகு ஒன்று நேற்று லிபியாவினி கிழக்குக் கடலோர நகராஅ தோப்ருக் அருகே உள்ள பர்தா தீவுக்கு அருகே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 50 பேர் மாயமாகி இருப்பதாகவும், அல்லது அவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என கடலோரக் காவல் படையினர் தெரிவிக்கின்றனர். விபத்தில் சிக்கிய 10 பேர் மட்டும் நீந்திப் பர்தா தீவை அடைந்து உயிர் தப்பியுள்ளனர்.
கடந்த மாதம் கிழக்கு லிபியக் கடற்கரையில் நடந்த மற்றொரு படகு விபத்தில் 51 அகதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு ஜனவரி 1 முதல் மே 16 வரையிலான குறுகிய காலத்திற்குள் மட்டும், மத்திய தரைக்கடல் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
