மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் ஒரு மாணவன் இவ்வளவு கொடூரமான முறையில் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையையும், ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது.

இளைஞர்களின் எதிர்காலத்தையே முற்றிலுமாகச் சீரழிக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் மீண்டும் நடைபெறாத வகையில், நம் சமூகத்தில் அமைதியும் மனிதநேயமும் வலுப்பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தற்போதைய அவசியமாக உள்ளது.

இக்கொடூர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் காவல்துறை மிக விரைவாகக் கைது செய்ய வேண்டும். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version