Close Menu
    What's Hot

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

    60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெகவில் இணைகிறேனா? கையெடுத்து கும்பிட்ட விஜயபாஸ்கர்..!! கொடுத்த ‘நச்’ பதில்..!!
    Featured

    தவெகவில் இணைகிறேனா? கையெடுத்து கும்பிட்ட விஜயபாஸ்கர்..!! கொடுத்த ‘நச்’ பதில்..!!

    editor5By editor5May 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உடையவனாக நான் எப்போதும் இருப்பேன் என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இன்று மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களின் கருத்துகளுக்கு முழு மதிப்பளிப்பதாகவும் உறுதியளித்தார்.

    “2001ஆம் ஆண்டு முதல் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளேன். கொரோனா காலத்தில் உயிரைத் துச்சமென நினைத்து மக்களுக்காகப் பணியாற்றினேன். தொகுதி மக்களின் நலனே எனக்கு முக்கியம். அவர்கள் என்னை நம்பி தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே மக்களின் முடிவே எனது முடிவு” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். தான் நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பதாகவும், எந்தவித அதிரடி அல்லது பரபரப்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், மக்களிடையே கருத்துக் கேட்பு நிகழ்வுகளைத் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

    51 வயதான விஜயபாஸ்கர், தான் 25 ஆண்டுகால பொது வாழ்க்கையில் மக்களுக்காகப் பாடுபட்டதை நினைவுகூர்ந்தார். “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடன் பயணித்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்வேன்” என்றார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வரும் யூகங்கள் குறித்து கேட்டதற்கு “அது வெறும் யூகம்” என்று மறுப்புத் தெரிவித்தார். நாளை சபாநாயகரைச் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு “நாளை பல திருமணங்கள் இருக்கின்றன” என்று புன்னகையுடன் பதிலளித்து தவிர்த்தார்.

    அதிமுகவில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கும், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தீர்களா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் மௌனப் புன்னகையால் பதிலளித்தார். மேலும், “தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பினால் மாற்றம் இருக்கும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்வேன்” என்று தெளிவுபடுத்தினார். செய்தியாளர் சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். வழி, ஜெயலலிதா வழி என்று மட்டுமே குறிப்பிட்ட அவர், தற்போதைய அதிமுக தலைமையின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராலிமலை தொகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முடிவெடுப்பேன் என்று வலியுறுத்திய விஜயபாஸ்கர், நாளை தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீணாக கடலில் கலக்கும் 2,500 டிஎம்சி நீர்..!! கர்நாடகாவிடம் ஏன் கெஞ்சுகிறீர்கள்..?? சீமான் கேள்வி..!!
    Next Article மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் தகராறு..!! தீர்க்கக்கோரும் பிரதமர் மோடி..!!
    editor5

    Related Posts

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026

    அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

    July 14, 2026

    60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

    60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!

    மஞ்சள் விலை தொடர்ந்து உயர்வு..!! ஈரோடு விவசாயிகள் உற்சாகம்..!!

    தொடர் உயர்வு..!! நாமக்கல் முட்டை விலை புதிய உச்சம்..!! அதிர்ச்சியில் முட்டை பிரியர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.