கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாளை முதலமைச்சர் விஜய் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜூன் 11) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு இன்று (ஜூன் 12) காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூர் சென்றடைந்த அவர், பின்னர் சாலை மார்க்கமாக கொல்லூர் சென்றார்.
அங்கு பிரசித்தி பெற்ற மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கொட்டும் மழையில் அவர் கோயிலுக்குள் சென்றார். பின்னர், மூகாம்பிகை அம்மனை முதலமைச்சர் விஜய் தரிசனம் செய்தார். இந்தநிலையில், மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாளை முதலமைச்சர் விஜய் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
