சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான  முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவில்,  சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன என பெருமிதம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ள முதலமைச்சர்,  கல்வி வளர்ச்சிக்கான பனகல் அரசரின் அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.

மேலும், பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version