கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்டத்திற்கு சிறப்பு விஜயம் செய்கிறார். இந்த சோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை நேரடியாக வழங்க உள்ளார்.

முதலமைச்சரின் இந்த வருகை கரூர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடையும் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூருக்குப் புறப்படுவார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் அபிமான தலைவரை பார்த்து உற்சாகத்தில் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்கவும் தயாராக உள்ளனர்.

கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் மாலையில் பிரமாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

பின்னர் அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், அங்கிருந்து கரூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கூட்ட நெரிசல் பெருங்கொடுமையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 32 அரசு பணி நியமன ஆணைகளை வழங்கி ஆறுதல் அளிக்கிறார். பல்வேறு துறைகளின் கீழ் இந்தப் பணிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர். தோல் அல்லாத (நான-லெதர்) காலணிகளை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 13,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் கரூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று கருதப்படுகிறது.

நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சர் திருச்சி விமான நிலையம் வந்து சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி கரூர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 6,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் வாகனப் பயணப் பாதை, நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வருகை மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version