கோவை மாநகராட்சியில் அனியாய வரி உயர்வுக்கு எதிராக கம்யூனிட்டுகள், கோவை மாநகராட்சியை திடீர் என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே சந்தேகம். மேலும் போலிசாரை தள்ளிவிட்டு கடுமையாக தாக்குதலில் ஈடுபட்ட “கம்யூனிஸ்டுகள்…. சண்டையில் கிழியாத சட்டையா?” என்ற நடிகர் வடிவேலுவின் காமடியைபோல அப்பாவியாக கம்யூனிஸ்ட்டுகளிடம் அடிவாங்கிய போலிசார்…
கடந்த 14 ஆம் தேதி கோவை மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பொருள் எண் 101 இல் பாதாள சாக்கடைக்கான வைப்புதொகை உயர்வு ரூ,7500 முதல்,80 ஆயிரம் வரை உயர்வு, மேலும் வருடம் 3 % சதவிகிதம் உயர்வு என்று தீர்மானம் நிறைவேற்றம், இந்த உயர்வு 1980 பிறகு இணைப்பு பெற்ற அணைவருக்கும் பொருந்தும் என்றும், அதுபோல் பொருள் எண்:- 102 இல் குடிநீர் இணைப்புகளுக்கான வைப்பு தொகையும், மாதாந்திர கட்டணமும் பல மடங்கு உயர்வு, மேலும் வருடம் 3% சதவிகிதம் உயர்த்தபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்பொழுது திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் இனைந்து கம்யூனிஸ்ட்டு மாமன்ற உறுப்பினர்களும் அதிமுக மாமன்ற உறுப்பினருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டதுடன் அதிமுக மாமன்றகுழு தலைவர் பிரபாகரனை அமைதியாக இருக்கவேண்டும் என்று மிரட்டலிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சியின் வரி உயர்வுகளை கண்டித்து கம்யூனிஸ்ட்டுகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாமன்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் முற்றுகை போராட்டத்யில் ஈடுபட்டது பங்காளி சண்டையா? பங்கு சண்டையா? அல்லது மக்களிடம் தப்பித்துகொள்ள கண்துடைப்பு நாடகமா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தள்ளி விட்டும், தாக்குவதற்கு முயற்சி செய்தும் காவல்துறையினரை துவம்சம் செய்தனர், ஆனால் சண்டையில் கிழியாத சட்டையா என்று அமைதியாக தங்களின் கடமைகளை செய்த போலிசாரின் நிலை பரிதாபமாக இருந்தது.
கோவை மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் அமைதியாக இருந்தது குறித்தும், அதிமுக மாமன்றகுழு உறுப்பினர் மட்டும் குரல் எழுப்பியது குறித்தும் மார்க் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பத்மநாபனிடம் கேட்ட கேள்விக்கு அதிமுக மாமன்ற உறுப்பினர் குப்பை கிடங்கிற்க்கு மட்டுமே குரல் எழுப்பினார், இந்த பொருள் விவாதத்திற்க்கு வரவில்லை என்று மழுப்பலாக தெரிவித்து தொடர்ந்த்ய் பேட்டிகொடுப்பதை தவிர்த்து சென்றார்.
