தமிழக சட்டமன்ற தேர்தலில் 107 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக ஆட்சி அமைக்க 117 இடங்கள் தேவைப்படும் நிலையில் 5 தொகுதிகளை கையில் வைத்துள்ள காங்கிரஸ் அதற்கு ஆதரவளித்துள்ளது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளையே வென்றது.

இப்போது கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறி தவெகவுக்கு தனது ஆதரவை அளித்துள்ளதற்கு திமுக தரப்பில் அதிருப்தி கிளம்பியிருக்கிறது.

திமுகவினரின் உழைப்பில் வெற்றியை பெற்று விட்டு இப்படி திமுக கூட்டணிக்கு துரோகம் இழைக்கலாமா என உடன்பிறப்புகள் ஆவேசம் காட்டியுள்ளனர்.

திமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் திலக் தனது பதவியை ராஜினாமா செய்வாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேபோல் திமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு காங்கிரசை சேர்ந்தவர்கள் மாநகராட்சி மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி தலைவர்களாகவும் பதவி வகித்து வரும் நிலையில் அவர்களுக்கும் திமுகவினர் எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த சரவணன் நீடிக்க திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version