இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.எபிக்கள், மாநில சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்களுக்கு மாத ஊதியம், பல்வேறு படித் தொகைகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அப்படி எவ்வளவு சம்பளம் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது?
தமிழ்நாட்டை பொறுத்தவரை புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசில் முதலமைச்சர் விஜய்க்கு, மாதம் ரூ.2 லட்சத்தில்ல் இருந்து ரூ.5லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுப்போக அரசு வீடு, கார், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். இதேப் போல், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் மாத சம்பளம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் ஆகும். அதே நேரத்தில் அமைச்சர்களுக்கும் அரசு வீடு, கார் கூடுதலாக வழங்கப்படும்.
மாத சம்பளம் ரூ.1லட்சத்து 5 ஆயிரத்தில் மாதாந்திரப்படி ரூ.10,000, தொகுதிப்படி ரூ.25,000, அஞ்சல் படி ரூ.2,500, தொலைப்பேசிப் படி ரூ.7,500, தொகுப்புப்படி ரூ.5,000, வாகனப்படி ரூ.25,000ஆகியவை உள்ளடக்கம்.
இது தவிர எம்.எல்.ஏக்களுக்கு பல சலுகைகள் உள்ளன. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் இலவச மருத்துவ வசதி, பயணம் செய்வதற்கு விமானம், ரெயில், பஸ் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். மேலும், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கான ஒரு அலுவலகத்தை நிர்வகிக்கலாம். தேவைப்பட்டால் ஒரு நபரை வேலைக்கு அமர்த்தலாம். அதற்கான சம்பளத்தையும் எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக வழங்கப்படும்.
இதுதவிர, சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது துறை சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு என தினசரி படியாக தலா ரூ.2,500 வரை தனியாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
