தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் விவசாயிகளைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வந்து கொண்டிருக்கின்றன.
அதிமுக ஆட்சியின்போது 2018 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து, தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளத்.
அத தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு மாதாந்திர வாரியாக காவிரி தண்ணீர் திறக்கப்படவேண்டும்.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தண்ணீர் வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் வாதாடி போராடிதான் தண்ணீரைப் பெறூம் நிலை உள்ளது.
புதிதாக கர்நாடகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிவக்குமார்,மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் எனக் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.
மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும். அப்படி இருக்கையில் இரண்டு மாநில நல்லுறவை சிதைக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் கருத்து வெளியிடுவது கண்டனத்துக்குரியது.
தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தற்போதைய சூழலில் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
வருகிற வேளாண்மை பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இல்லையென்றால் தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகளைத் திரட்டி தவெக அரசுக்கு எதிராக அதிமுக கண்டனப் போராட்டம் நடத்தும்.
