சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில்,  திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தினை திருச்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பா.குமார் மற்றும் பரஞ்சோதி புறக்கணித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், வேலுமணி தரப்புக்கு ஆதரவாக பா.குமார் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் செயல்பட்டனர்.

இதையடுத்து பா.குமார் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்புகளை பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி நடைபெற்று வரும் நிலையில் இருவரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் வேட்பளராகப் போட்டியிட்ட பா.குமார் தோல்வி அடைந்தார்.

பரஞ்சோதிக்கு போட்டியிட வாய்ப்பே தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version