Close Menu
    What's Hot

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    திடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»எதிர்த்து நின்னா கொலைதான் பதிலா..?? இதுதான் ஆட்சி மாற்றமா..?? கொந்தளித்த இபிஎஸ்..!!
    Featured

    எதிர்த்து நின்னா கொலைதான் பதிலா..?? இதுதான் ஆட்சி மாற்றமா..?? கொந்தளித்த இபிஎஸ்..!!

    editor5By editor5June 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்தால் கொலைதான் பதில் என்பதா இந்த ஆட்சியின் மாற்றம்?” என்று எடபப்டி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

    சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் போதைப்பொருள் விற்பனையை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய 23 வயது இளைஞர் விஷ்ணு அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஷ்ணு, அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த கஞ்சா கும்பலின் நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாமல் அவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியல் போன்றவற்றால் அம்மிக்கல்லை தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் படுகொலைச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தண்டையார்பேட்டை, வாசல், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் நீண்ட நேரம் சாலையை மறித்ததால் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு ஆளானார்கள். போலீசார் மக்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கலைத்தனர்.

    இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப்பொருள் புழக்கத்தை எதிர்த்தால் கொலைதான் பதில் என்பதா இந்த ஆட்சியின் மாற்றம்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “திருச்சியில் பேசிய முதல்வர் தன் மீது வீண் பழி சுமத்துவதாக ஆதங்கப்படுகிறார். அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதுமா? மாற்றம் ஆட்சியாளரிடம் இருந்து வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருந்தும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை” என்று விமர்சித்தார்.

    போதைப்பொருளை ஒழிக்க முடியாது என மறைமுகமாக ஒப்புக்கொண்டதாகவும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை அடுத்த வாரம் தொடங்குவதாக அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டிய எடப்பாடி, “கடந்த வாரம் தயாராக இருந்ததை ஏன் ரத்து செய்தீர்கள்?” என்று கேட்டார். தூத்துக்குடியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட சமீபத்திய சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், “ஒரு கட்சித் தலைவராக தன் கட்சியினரை அடக்க முடியாதவர் எப்படி மாநிலத்தை நிர்வகிப்பார்?” என்று வினவினார்.

    “ஆட்சி நடத்தும் முறையை கற்றுக்கொள்ளும் வரை மக்கள் உயிரிழந்து கொண்டே இருக்க வேண்டுமா?” என்று கேட்ட எடப்பாடி, முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6 மாசம் தான் டைம்..!! தமிழக நகரங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சி..!! தவெக அரசு அதிரடி..!!
    Next Article தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!
    editor5

    Related Posts

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    June 2, 2026

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    June 2, 2026

    திடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    திடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!

    ஜோசப் விஜய் வாய்ச்சவடால் ஆட்சி;  தத்தக்கா பித்தக்கா தவெக அரசு – கரித்து கொட்டும் ஹெச்.ராஜா

    பாஜக தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை முக்கிய மீட்டிங்..!! எதிர்பார்ப்பு உச்சம்..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.