உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 11ஆவது லீக் போட்டியில் குரூப் எஃப் பிரிவில் வலிமை மிக்க நெதர்லாந்து மற்றும் திறமையான ஜப்பான் அணிகள் நேற்று சந்தித்தன. இரு அணிகளும் வெற்றிக்காக களமிறங்கிய இந்த ஆட்டம், முழு நேரம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினாலும், பாதுகாப்பு வரிசை இறுக்கமாக இருந்ததால் எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை.

நெதர்லாந்தின் தாக்குதல் வரிசை ஜப்பானின் உறுதியான பாதுகாப்பை உடைக்க முடியாத நிலையில், ஆட்டம் 0-0 என்ற சமநிலையில் இடைவேளிக்குச் சென்றது. இரண்டாவது பாதியில் ஆட்டம் பரபரப்புக்கு உயிர் பெற்றது. ஆட்டம் தொடங்கிய 50ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் அனுபவசாலி மையப் பாதுகாவலர் வெர்ஜில் வென் டிஜக் தலையால் அழகான கோல் அடித்து தன் அணிக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். இந்தக் கோல் அடித்ததும் நெதர்லாந்து ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

எனினும், ஜப்பான் வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுக்கத் தயாராக இருந்தனர். 57ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டொ நாக்முரா சிறப்பான ஒரு தனிப்பட்ட முயற்சியின் மூலம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்குக் கொண்டு வந்தார். இந்தக் கோல் ஜப்பான் அணியின் உறுதியையும், எதிரணியை அழுத்தத்தில் தள்ளும் திறனையும் வெளிப்படுத்தியது.64ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து மீண்டும் முன்னிலை பெற்றது.

இளம் வீரர் கிரைசென்சியொ சம்மர்வெலி அணியின் தாக்குதலை சிறப்பாக ஒருங்கிணைத்து கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-1 ஆனது. போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, 88ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைசி கமடா அற்புதமான ஒரு ஷாட்டின் மூலம் கோல் போட்டு ஆட்டத்தை மீண்டும் 2-2 என்ற நிலைக்குக் கொண்டு வந்தார். இந்தக் கோல் மைதானத்தை அதிரவைத்தது. 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் ஆட்ட நேரம் 6 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது. இந்தக் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் வெற்றிக்காக முழு முயற்சி எடுத்தன. நெதர்லாந்தின் வேகமான தாக்குதல்களையும், ஜப்பானின் ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் எதிர்த்தாக்குதல்களையும் சமாளித்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த டிரா முடிவு குரூப் எஃப் பிரிவில் போட்டியை இறுக்கமாக்கியுள்ளது. நெதர்லாந்து அணி தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சித்தாலும், ஜப்பானின் துணிச்சலான ஆட்டம் அவர்களுக்கு சவாலாக அமைந்தது. இரு அணிகளின் வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்த போட்டிகளில் இந்தப் புள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version