கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனக் கூறி மாநிலம் முழுவதிலும் பல தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் ரூ.100கோடிகும் மேல் வசூல் செய்துள்ளார் திமுகவை சேர்ந்த அரசகுமார். இது தொடர்பாக அரசகுமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரசகுமாரை கைது செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்​கீ​காரம், டி.டி.சி.பி. மற்​றும் சி.எம்.​டி.ஏ. அங்​கீ​காரம் உள்​ளிட்ட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களை பெற்​றுத் ​தரு​வ​தாக கூறி, தமிழகம் முழு​வதும் பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து ரூ.100 கோடிக்​குமேல் வசூலித்து மோசடி செய்​துள்​ள​தாக அளிக்​கப்​பட்ட புகாரின் பேரில், அரசகுமார் மீது இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version