தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடுக்கி மாவட்டம் முழுவதும் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் தொடர் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, இடுக்கி பட்டப்பாலம் மற்றும் கீரித்தோடு இடையே செல்லும் அடிமாலி – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முக்கிய இடங்களில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலச்சுவடு – வன்னபுரம் சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நிலச்சரிவு அபாயம் தொடர்வதால் மலைப்பாதைகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடும், அத்தியாவசியத் தேவைகளின்றி பயணங்களைத் தவிர்க்குமாறும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, மண்சரிவு ஏற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க இடுக்கி கஞ்சிக்குழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தட்டக்கண்ணி பகுதியில் நிவாரண முகாம் திறக்கப்பட்டு, தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version