கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கானவர்களின் உணர்வாகவும், ஆயிரக்கணக்கானவர்களின் தொழிலாகவும் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, தற்போது உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த விளையாட்டு, பல நாடுகளின் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆனால் அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் ஒன்று போலவே செல்வத்தை வைத்திருப்பதில்லை. அவை ரசிகர்களுக்கு ஏற்பவும், அந்த நாடுகளில் உள்ள சூழலுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது.
இந்தநிலையில், உலகில் உள்ள கிரிக்கெட் சங்கங்களில் பணக்கார கிரிக்கெட் சங்கமாக இருப்பது இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ தான். இந்தியா முழுவதும் ஒரு மதத்தை போல கிரிக்கெட் இருக்கும் என்பதற்கேற்ப, அதன் ரசிகர்களும் கோடிகணக்கில் உள்ளார்கள். முக்கியமாக, ஐபிஎல் காரணமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் வரத்தொடங்கியது. தற்போது, சுமார் ரூ.2,200கோடி மதிப்போடு, பிசிசிஐ உலகின் மிகப் பணக்கார சங்கமாக உள்ளது.
உலகளாவிய வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 70 சதவீதத்துக்கும் மேலாக கிடைக்கிறது. 2024 முதல் 2027 வரையிலான கால கட்டத்தில் ஐ.சி.சி.யின் வருவாயில் 38.5 சதவீதம் பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கிறது. தோராயமாக ரூ.2079 கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கிறது.
இதேபோல், ஐ.சி.சி.யின் வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு 5.75 சதவீதம் ஆகும். அதாவது அவர்கள் ரூ.310 கோடி சம்பாதிக்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில்தான் அதிக அளவில் வருவாய் குவிகிறது. வருவாயை கருத்தில் கொண்டு இரு அணிகளும் நிதி நிலைப்பாட்டில் பயன் அடைகிறது.
