வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வியட்நாமில் பு குவோக் தீவுப் பகுதியில், இந்தியப் பயணிகள் சென்ற படகு எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வியட்நாம் அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பில் இருந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், படகு விபத்தின் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும், இந்திய அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version