2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறி முதலமைச்சர் விஜய் போட்டுள்ள முதல் கையெழுத்தே மோசடி என சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் தவெக ஆட்சி அமைத்தால் தகுதியுள்ள வீடுகளுக்கு  ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது தவெக ஆட்சி அமைத்து ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதும், இரண்டு மாதங்களுக்கு  500 யூனிட்டுகள் வரைமின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரண்டு  மாதங்களுக்கு  200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்னும் அரசாணையில் முதல் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் எந்த சலுகையும் கிடைக்காது. இது மறைமுக மின் கட்டண உயர்வே ஆகும். விஜய் முதல் கையெழுத்தே மோசடி கையெழுத்து என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக தமிழக அரசு விளக்கமளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் கட்டணமில்லை எனவும், , 500 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கனவே, நடைமுறையில் உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் எனத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய மின்திட்டத்திற்கு

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version