திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என்று தான் கூறியது தொண்டர்களின் மனக்குமுறலால்தான் என துரைவைகோ தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது திமுகவின் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துரதிர்ஷ்டம் எனக் கூறியது வாஸ்தவம்தான்.  கொடியும் சின்னமும் தான் ஒரு கட்சியின் அல்லது இயக்கத்தின் அடிப்படை அடையாளங்கள். மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்போது, தன்னுடைய தனித்துவத்தை அது இழக்கும்.

ஒரு கட்சியின் உறுப்பினர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன், தான் சார்ந்த கட்சியில் இருந்து அவர் ராஜினாமா செய்யவேண்டும். பின்னர் அவர் போட்டியிடும் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு அந்தசின்னத்தில் போட்டியிடவேண்டும். இதுதான் ஜனநாயகம்.

10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து வருவதாலும், உதயசூரியன் சின்ன விவகாரம் கடைசி நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தில் அதனால் நாங்கள் வெளியேறி அதனால் ஒரு சர்ச்சை ஏற்படக்கூடாது என்பதால்தான் நாங்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டோம்.

கூட்டணி தலைமைக்கு கஷ்டத்தை உருவாக்க வேண்டாம் என்னும் அடிப்படையில் போட்டியிட்டோம்.

ஆனால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனக்குமுறலின் வெளிப்பாடாகத்தான்  துரதிர்ஷ்டம் எனக் கூறினேன். இதனை தவறு எனக் கண்டிப்பாக சொல்லமாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version