மறைந்த நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் கொண்டவராவார்.

திரைத்துரையில் தனது தனித்துவம் வாய்ந்த திரைக்கதை பாணியாலும், வித்தியாசமான இயக்கம் மற்றும் வசனம் காரணமாகவும் பாக்யராஜின் திறமையை ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆர். கவனித்திருந்தார்.

அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் அவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதோடு, பாக்யராஜ் நடித்த மற்றும் இயக்கியப் படங்களின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, அவரது விழாக்களிலும் பங்கேற்றுள்ளார்.

எம்.ஜி.ஆரால் தனது கலைவாரிசாக அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர் நடிகர் பாக்யராஜ் ஆவார்.  எம்.ஜி.ஆர், பாக்யராஜை மிகவும் அன்புடன்பாக்கிஎன்றுதான் அழைப்பார்.

பல்வேறு நேர்காணல்களிலும், எம்.ஜி.ஆர். தன்னிடம் மிகுந்த அன்புடன் பழகியதையும், அவரிடமிருந்து ஊக்கமும், பாராட்டும் கிடைத்ததையும் பாக்யராஜ் நினைவு கூர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்றஅண்ணா நீ என் தெய்வம்திரைப்படத்தை, அவர் மறைவுக்குப் பின் பாக்யராஜ் பொறுப்பேற்று முடித்துஅவசர போலீஸ் 100′ என்ற பெயரில் வெளியிட்டார். இது எம்.ஜி.ஆர் மீது அவர் வைத்திருந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும் ஒரு சிறந்த சான்றாகும்.

 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் 1989-ல்எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை பாக்யராஜ் தொடங்கினார். எனினும், மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் அப்பார்ட்டியை கலைத்துவிட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும், 2006-ல் திமுகவிலும் இணைந்து பணியாற்றினார்.

காலப்போக்கில் தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகினார். திராவிட சித்தாந்தக் கொள்கைகளில் தனக்கு ஈடுபாடு உண்டு எனத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version