Close Menu
    What's Hot

    இந்த அரசு மக்களுக்கான அரசு என உறுதி செய்தார் ஆளுநர்..!! வைகோ பாராட்டு..!!

    திருட்டு சந்தேகத்தில் வடமாநில தொழிலாளி மீது தாக்குதல்..!! உயிரிழப்பில் முடிந்த நள்ளிரவு சம்பவம்..!!

    அம்மா உணவக இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனையா..?? நெல்லை மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் கோரிய மனு..!! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!
    Featured

    நீட் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் கோரிய மனு..!! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

    editor5By editor5June 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு நேர்மையாக, வெளிப்படையாக நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் யுஜி, மே 3 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்த சர்ச்சை எழுந்ததால், தேசிய தேர்வு முகமை (NTA) மே 12 அன்று தேர்வை ரத்து செய்தது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மறுதேர்வின்போது முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், ஜூன் 22 வரை டெலிகிராம் செயலியை இந்தியா முழுவதும் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நீட் தேர்வை நியாயமான முறையிலும், முழு வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான விரிவான மற்றும் நீண்டகால வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என வெங்கடேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு (PIL) ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது நீதிபதிகள், 2024-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினர். மேலும், தற்போதைய வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உயர்நீதிமன்றம் தலையிட்டு விசாரணை செய்ய முடியாது எனக் கருதிய நீதிபதிகள், வெங்கடேஸ்வரன் தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    நீட் தேர்வில் தொடர்ந்து எழும் முறைகேடு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவ இடங்களுக்காக போட்டியிடும் இந்தத் தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள் அவசியம் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வரும் தீர்ப்பு இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    chennaihighcourt NEET
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்..!! தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு..!!
    Next Article நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..!! சாலை மறியலில் குதித்த திராவிட மாணவர் கழகத்தினர்..!! திடீர் பரபரப்பு..!!
    editor5

    Related Posts

    இந்த அரசு மக்களுக்கான அரசு என உறுதி செய்தார் ஆளுநர்..!! வைகோ பாராட்டு..!!

    June 18, 2026

    திருட்டு சந்தேகத்தில் வடமாநில தொழிலாளி மீது தாக்குதல்..!! உயிரிழப்பில் முடிந்த நள்ளிரவு சம்பவம்..!!

    June 18, 2026

    அம்மா உணவக இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனையா..?? நெல்லை மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு..!!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்த அரசு மக்களுக்கான அரசு என உறுதி செய்தார் ஆளுநர்..!! வைகோ பாராட்டு..!!

    திருட்டு சந்தேகத்தில் வடமாநில தொழிலாளி மீது தாக்குதல்..!! உயிரிழப்பில் முடிந்த நள்ளிரவு சம்பவம்..!!

    அம்மா உணவக இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனையா..?? நெல்லை மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு..!!

    பயிர்க்கடன் தள்ளுபடிக்காக வயலில் தியானம்!. விவசாயிகள் நூதனப் போராட்டம்!

    25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.