கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர் பின்னடைவு ஏற்பட்டு வருவது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகளில் இருந்தே அவர் பின்தங்கிய நிலையில் இருந்தார். தற்போது முடிவடைந்துள்ள மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் இறுதியிலும், அவர் மற்ற பிரதான வேட்பாளர்களை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து பின்னடைவிலேயே நீடிக்கிறார்.

விருத்தாச்சலம் தொகுதி தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த்  முதன்முதலில் களம் கண்டு வெற்றி பெற்ற ராசியான தொகுதி என்பதால், அங்கு பிரேமலதா போட்டியிடுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அங்கு திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வரும் வேளையில், பிரேமலதா விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த நிலை மாறுமா அல்லது விருத்தாச்சலம் கோட்டையை தேமுதிக இழக்குமா என்பது மதியத்திற்குள் தெரிந்துவிடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version