கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் துணை நிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தை, இந்தியா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் கொண்டாடி வருகிறது.

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும், உயிரோடு இருக்கும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் படை வீரர்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version