ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு நாள் ஓட்டி சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கவனகர் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போதும் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவஞ்சலி செலுத்தி புகழ் பாடி கொண்டிருக்கிறது காங்கிரஸ் பேரிருக்கும் இந்தியாவின் தலை நிமிரங்க வைத்தவர் ராஜீவ் காந்தி அவர்கள் அமெரிக்கா எந்த விதத்திலும் இந்தியாவில் அடிப்படையை வைக்க முடியாது என்ற இந்தியாவை கொண்டு வந்தவர் மாபெரும் தலைவர் அவர்களுக்கு ராஜீவ் காந்தி மறைக்க முடியாது வாழும் வரை ராஜீவ்காந்தி புகழை யாராலும் மறக்க முடியாது என்றார்.

காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர் பதவி ஏற்பது குறித்த கேள்விக்கு, பெரும்மகிழ்ச்சி” என்று கூறிவிட்டு சென்றார். அவரை தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் பேசிய போது, ”59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் கமிட்டி இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” நன்றியும் காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிரிஷ் ஜோடங்கர், ”காங்கிரஸ் நிர்வாகிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் இடம் பெறுவது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் வழியில் எங்களது உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நாங்கள் தமிழ்நாடு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version