Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மாநிலங்களவை எம்.பி. தேர்வு எப்படி நடக்கும்.?
    Featured

    மாநிலங்களவை எம்.பி. தேர்வு எப்படி நடக்கும்.?

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025Updated:May 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rajashabaelection
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளை கொண்டது தான் நாடாளுமன்றம்.
    மக்களவையில் 545 இடங்களும், மாநிலங்களவையில் 250 இடங்களும் உள்ளன. 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 12 பேர் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு உறுப்பினர்கள் ஆவர்.
    மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், மாநிலங்களவைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ.க்கள்) வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள்.
    ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும்.
    தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 இடங்களும், மாநிலங்களவையில் 18 இடங்களும் உள்ளன. தற்போது, மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    இதன்படி, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
    தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அ.தி.மு.க.வில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது.
    கடந்த முறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக் காலமும் முடிவடைகிறது.
    தி.மு.க.வை பொறுத்தவரை வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோன்று, தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதால்,

    1709983420 new project 25

    அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாக நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
    வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    vaiko

    அன்புமணி ராமதாஸ் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

    anbumani10112021m
    அதனால், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரின் வாக்கு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.
    இருப்பினும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களை அ.தி.மு.க.வால் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, அ.தி.மு.க.வில் 2 மாநிலங்களவை எம்.பி. பதவிகளைப் பெற போட்டா போட்டி நிலவுகிறது.
    காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது. அதற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். 6 பேர் மட்டும் விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றே கூறப்படுகிறது

    how Rajya Sabha works Indian Constitution Indian election process Indian Parliament MP election Tamil Rajya Sabha election Rajya Sabha MP election Rajya Sabha Tamil explanation state assembly voting Tamil political education Tamil politics மாநிலங்களவை எம்.பி தேர்வு மாநிலங்களவை தேர்தல்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கடனுக்கான வட்டி குறையும், வளர்ச்சி அதிகரிக்கும்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Next Article காளியம்மன் கோவில் நில விவகாரம்: திண்டுக்கல்லில் பொதுமக்கள் கண்டனப் போராட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.