தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் ஏ.அருணின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

தமிழகமுதல்வர்விஜய்கண்டெடுத்ததங்கம்செய்தவேலைஎனக் கூறி அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

அதில், அருண்லஞ்சஒழிப்புத்துறைக்குபொருத்தமானவர்இல்லைஎன்றுமிகப்பெரியஎதிர்ப்புஅலைகிளம்பியது. ஆனால்இன்னமும்லஞ்சஒழிப்புத்துறைஇயக்குனராகவேதொடகிறார். அந்ததங்கம்செய்தவேலைஎன்னஎன்பதைபார்ப்போம்என கூறி ஒரு நிகழ்வினை குறிப்பிட்டுள்ளார்.

 

1999இல் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி என்பவரின் முழுநேர வேலையே வசூல்தான் எனவும்பலபிரிவுகள் மாறிவிபச்சாரதடுப்புபிரிவுக்கு வந்தவரின், மாதமாமூல் 50 லட்சம். இதில் 30 லட்சம்மாதம்தோறும்அருணுக்குசென்றது. இத்தொகையைமாதம்தோறும்வாங்கிஅருணிடம்தந்தவர்அருணின்முகாம்உதவியாளர்ஐயப்பன்எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வசூலில் கொடிகட்டி பறந்த ராஜலட்சுமி மீது, 2026 பிப்ரவரியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்ததோடு, ராஜலட்சுமிவீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

 

இந்த சூழலில், முதல்வர்விஜய்கண்டெடுத்ததங்கம் (அருண்) லஞ்சஒழிப்புத்துறைக்குநியமிக்கப்படுவதாகவும், ஒருசிலநாட்கள் பொறுமையாக இருந்தஅந்ததங்கம்ராஜலட்சுமிமீதுசொத்துக்குவிப்புவழக்கைபதிவுசெய்தஆய்வாளர் விமலாவை சஸ்பெண்ட்செய்ததோடு, ஜாய்தயாள்என்ற DSPயைஊட்டிக்குமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

நேர்மையானஅதிகாரியானவிமலா, சென்னைஉயர்நீதிமன்றத்தைஅணுகிதனக்குநேர்ந்தஅநீதியைமுறையிட்டார். சென்னைஉயர்நீதிமன்றம், விமலாவின்பணிஇடைநீக்கத்தைஉள்நோக்கம்கொண்டதுஎன்றுகூறிதடைசெய்திருப்பதாகவும் பதிவிட்டு, ஊழல் புகாருக்கு ஆளான அதிகாரி பணியில் இருப்பதும், (ராஜலட்சுமி) அவரை விசாரணை செய்யும் அதிகாரி (விமலா) சஸ்பெண்டில்இருப்பதுமான வினோதத்தை நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.

 

ஆய்வாளர் விமலா லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3 பிரிவில் பணியாற்றுகிறார். இந்தப் பிரிவின் டி.எஸ்.பி. கந்தசாமி. விமலாவை சஸ்பெண்ட் செய்யும்போது, அவரது பணியை சரிவர மேற்பார்வை செய்யவில்லைஎன்று ஜாய் தயாள் DSP என்பவரை,ஊட்டிக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் கந்தசாமியைத்தான் இடமாற்றம் செய்திருக்கவேண்டும் எனவும்,சம்பந்தமே இல்லாமல் ஜாய் டிஎஸ்பி ஏன் ஊட்டிக்கு மாற்றப்பட்டிருகிறார் என்பது இன்னும் மர்மமாக உள்ளதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் நியமனத்தில்நாளுக்கு நாள் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள சவுக்கு சங்கர்,முதல்வர் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version