தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் மாநில ஊராக வாழ்வாதர இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது போராட்டக்காரர்களை சந்திக்க சீமானுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மற்றும் சீமான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
