தமிழ்நாடு அரசின் நிலை நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று மாலை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெள்யிடுகிறார்.

17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான தவெக தலைவர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து வெள்ளை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு கிளம்பியது.

அண்மையில் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலுக்கு வருகைதந்திருந்த நிதி அமைச்சர் மரியவில்சனிடம் நிருபர்கள் வெள்ளை அறிக்கை தொடர்பாக கேள்வி கேட்டபோது அவரும் விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணியளவில் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை (WHITE PAPER ON THE FISCAL MANAGEMENT OF TAMIL NADU) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி, வெள்ளை அறிக்கையை இன்று மாலை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 18ஆம் தேதி கூடும் நிலையில், இன்று மாலை வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version