Close Menu
    What's Hot

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் விவகாரம்: களத்தில் இறங்கிய CM விஜய்..!! முக்கிய ஆலோசனை..!!
    Featured

    டாஸ்மாக் விவகாரம்: களத்தில் இறங்கிய CM விஜய்..!! முக்கிய ஆலோசனை..!!

    editor5By editor5June 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 13 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழக வெற்றி கழகத் தலைவரும், நடிகருமான ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அரசின் முதல் முக்கிய நிர்வாக நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மூடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மே 12 அன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, பொது இடங்களுக்கு அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை இலக்கு வைத்துள்ளது. கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது மற்றும் புனித இடங்களுக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் இயங்கும் மதுக்கடைகளை மூடுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

    மொத்தம் 4,765 டாஸ்மாக் கடைகளில் 717 கடைகள் இந்த வரம்புக்குள் இருப்பதாக அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. இதில் 276 கடைகள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், 186 கடைகள் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், 255 கடைகள் பேருந்து நிலையங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளன. இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பல கடைகள் இன்னும் முழுமையாக மூடப்படாத சூழல் நிலவுகிறது. முதலமைச்சர் விஜய் பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வாக்குறுதியின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுவதாகவும், தமிழ்நாட்டை மது மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் நீண்டகால இலக்கின் முதல் பெரிய அடியாக இது கருதப்படுகிறது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே அதிகாரிகள் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டனர். சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆரம்ப நாட்களில் பல கடைகள் அடைக்கப்பட்டன. இருப்பினும், பல மாவட்டங்களில் இன்னும் மதுக்கடைகள் இயங்கி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். “இன்னும் ஏன் பல கடைகள் மூடப்படாமல் உள்ளன?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், மூடல் நடவடிக்கையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் விவகாரம் குறித்தும் அவர் விசாரணை செய்து வருகிறார். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் மது அடிமைத்தனத்தை குறைக்கும் என பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்படும் ஊழியர்களின் வாழ்வாதாரம் குறித்தும் அரசு உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்துகின்றனர். முதலமைச்சரின் இந்த தீர்மானமான அணுகுமுறை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎரிபொருள் சிக்கன நடவடிக்கை..!! புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை..!!
    Next Article சொத்து விவரத்தை மறைத்தாரா எடப்பாடி பழனிசாமி? வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    editor5

    Related Posts

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    June 3, 2026

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    June 3, 2026

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    போதை பொருட்களுக்கு ஃபுல் ஸ்டாப்..!! மாஸ் காட்டும் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.