Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»100 நாள் வேலைத்திட்டம் ரத்து! புதிய சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசு.. என்ன காரணம்?
    Featured

    100 நாள் வேலைத்திட்டம் ரத்து! புதிய சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசு.. என்ன காரணம்?

    Editor web3By Editor web3December 15, 2025Updated:December 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    100 Days Work
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் விரைவில் முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு பதிலாக, ‘விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற பெயரில் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

    இந்த புதிய மசோதாவின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், கிராமப்புறக் குடும்பங்களுக்குச் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படும் வேலைவாய்ப்பு நாட்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டாலும், இந்த புதிய சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் செலவினங்கள் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த புதிய சட்ட மசோதா, “ஒவ்வொரு நிதியாண்டிலும், கிராமப்புறக் குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்கள் தாங்களாக முன்வந்து திறமையற்ற உடல் உழைப்பு வேலைகளை செய்ய முன்வந்தால், அவர்களுக்கு 125 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதிய சட்டத்தின் கவனம் முழுவதும், பொதுப் பணிகளை ஒருங்கிணைத்து, ‘விக்சித் பாரத் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு அடுக்கை உருவாக்குவதாகும். இதில் நீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், கிராமப்புறத்தின் முக்கிய உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை சமாளிக்கச் சிறப்புப் பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் இடம்பெறும்.

    மகாத்மா காந்தி பெயரை நீக்குவது ஏன்?

    2005ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் NREGA சட்டம் இயற்றப்பட்டு, பின்னர் 2009இல் மகாத்மா காந்தியின் பெயர் இணைக்கப்பட்டு MGNREGA எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மகாத்மா காந்தியின் பெயரைக் குறிக்கும் பழைய சட்டத்தை நீக்கும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “மகாத்மா காந்தி உலகின் மிகச் சிறந்த தலைவர். இந்தத் திட்டத்தில் இருந்து அவரது பெயரை நீக்குவது ஏன் என்று எனக்கு புரியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
    Next Article அதிமுக புல்லட் ரயில் போன்றது; உதயநிதி இன்னும் அப்டேட் ஆகவில்லை!. ஜெயக்குமார் பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா!. பிரதமர்  மோடி!.

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    April 13, 2026

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    April 13, 2026

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.