சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்ககம் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ராஜ்,

“சுகாதாரத் துறையின் இணை இயக்குனர்களுடன் இன்றும், நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஒரு நோயாளி மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அங்கு மருத்துவமனை சிகிச்சை சுகாதாரம் உள்ளிட்டவை நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவமனை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும், மேலும் சுத்தம், சுகாதாரமாக இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பாராட்டு வழங்க இருக்கிறோம்” என்றார்.

கிட்னி திருட்டு சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”கிட்னி திருட்டு விசாரணை தேர்தல் நேரம் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் அதன் விசாரணை தொடங்கியுள்ளது. வெளிப்படை தன்மையோடு விசாரணை நடக்கும் , நிச்சயமாக நியாயம் கிடைக்கும். கிட்னி திருட்டு விசாரணை முழு மூச்சில் செயல்படும் யார் குற்றம் செய்திருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என தெரிவித்தார்.

சிவகாசி சம்பவம் குறித்த கேள்விக்கு,
”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தவிர வேறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் யாரும் இனி ஆய்வுக்கு செல்ல மாட்டார்கள்” என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version