கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பயணித்த காரில், கட்சி நிர்வாகி ஒருவர் தொங்கியபடி சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி பரதன், திருமாவளவனை சந்தித்து சிறிது நேரம் உரையாடிய பின்னர், அவரது கார் புறப்பட்டபோது காரின் கதவைப் பிடித்தபடி தொங்கியவாறு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற காரில் தொங்கியபடி பயணித்ததாகவும், பின்னர் கார் வேகம் குறைக்கப்பட்டபோது பாதுகாப்பாக கீழே இறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version