கர்நாடகா மாநிலம் துபரே யானைகள் முகாம் சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இங்குள்ள யானைகளின் தினசரி வாழ்க்கையுடன் சுற்றுலா செல்லும் மக்கள் நேரடியாக அருகே இருந்து கண்டுகளித்து செல்வர்.

பல யானைகளை ஒரே இடத்தில் காண வாய்ப்பு கிடைப்பதால், விடுமுறை நாட்களில் இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குவிவர். அந்த வகையில், சென்னை உட்பட பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் துபரே யானைகள் முகாமில் முகாமிட்டிருந்தனர்.

யானைகளை பாகன்கள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க வைக்கும் போது, இரு யானைகளுக்கு இடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில், நிலை குலைந்த மார்த்தாண்ட யானை கரையோரம் நின்றிருந்த சென்னையை சேர்ந்த 33 வயதான ஜூனேஷ் என்ற பெண், உடல் நசுங்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த ஜூனேஷின் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அத்தோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வனத்துறை அமைச்சர் இரங்கலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version