நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றி அழிக்க அனுமதித்து ஊக்குவித்ததாகவும், அதற்குப் பொறுப்பான அனைவரையும் பிரதமர் மோடி பாதுகாத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். “நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதித்தவர் நீங்கள்தான்; நமது கல்வி முறையின் அழிவுக்கு நீங்களே முழுப் பொறுப்பு” என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

https://x.com/RahulGandhi/status/2080145197745553599?

மேலும், மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அதன்படி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கூடுதலாக, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், இறுதியாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version