Close Menu
    What's Hot

    கண் இமைக்கும் நேரத்தில் எதிரியை அழிக்கும் திறன் கொண்ட  கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்!. ஜனாதிபதி முர்மு பயணம்!.

    கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதல் பற்றி விஜய் வாய் திறந்தாரா? திருமா விமர்சனம்!.

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பெங்களூருவில் 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…
    இந்தியா

    பெங்களூருவில் 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 10, 2025Updated:August 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்களூருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 3புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்ற அவர், 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ”பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் – புனே” ஆகிய வழித்தடங்களில் இந்த புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

    பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மஞ்சள் நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி பச்சை கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின்னர், ரயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டவர், ரயிலில் அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். இதனை தொடர்ந்து,

    ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி, பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசனீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
    Next Article 10 நாட்களாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்… 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி…
    Editor TN Talks

    Related Posts

    கண் இமைக்கும் நேரத்தில் எதிரியை அழிக்கும் திறன் கொண்ட  கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்!. ஜனாதிபதி முர்மு பயணம்!.

    December 27, 2025

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    December 27, 2025

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கண் இமைக்கும் நேரத்தில் எதிரியை அழிக்கும் திறன் கொண்ட  கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்!. ஜனாதிபதி முர்மு பயணம்!.

    கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதல் பற்றி விஜய் வாய் திறந்தாரா? திருமா விமர்சனம்!.

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    கண் இமைக்கும் நேரத்தில் எதிரியை அழிக்கும் திறன் கொண்ட  கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்!. ஜனாதிபதி முர்மு பயணம்!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.