மாநிலங்களவையில் அதிமுக புதிய எம்.பி.,க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் கடந்த ஜூன் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 25-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்ந்து இன்று காலை அதிமுக எம்.பி.,க்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு மாநிலங்களை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஏற்கனவே மாநிலங்களவையில் அதிமுக சார்பில் தம்பிதுரை, சி.வி.சண்முகம், தாமர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version