8 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சுந்தரபன்ஸ் பகுதியில் நடைபெற்ற யானை மற்றும் புலிகள் பாதுகாப்பு திட்ட கூட்டத்தில் நேற்று அவர் பங்கேற்றார். அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறியதாவது:
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் இறந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசு கூறியுள்ளது. ரயில்வே பாதைகளையொட்டி யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகளும், வனத்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
