Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலில் சிக்கி ஒருவர் பலி
    இந்தியா

    சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலில் சிக்கி ஒருவர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sabari
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கோயில் வளாகம் முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது.

    மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு சன்னிதானத்தில் ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்று வரும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஐயப்ப பக்தர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

    உடனடியாக அவருடன் வந்த சக பக்தர்கள், ஆம்புலன்ஸ் உதவிக் கோரி பம்பாவில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டதாக தெரிகிறது. ஆனால், தங்களுக்கு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணுடன் வந்தவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசு தவறிவிட்டதாக அந்த மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதனிடையே, சபரிமலையில் கூட்டம் கட்டுக்குள் இருப்பதாக டிஜிபி ரவடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், “நவம்பர் 17 ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். பக்தர்கள் வெர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்த நாளில் மட்டுமே வர வேண்டும். பலர் அதனை பின்பற்றுவதில்லை. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலையில் போதுமான காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததே பிரச்சனைக்கு காரணம். குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5,000 பேருந்துகள் மூலம் சபரிமலைக்கு பக்தர்கள் வந்துள்ளனர்.

    பம்பைக்கு வந்த அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான நாட்களில் இவ்வளவு கூட்டம் வருவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

    சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலியான நிலையில், முதியவர்களை பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து வர சபரிமலை தேவஸ்தான போர்டு பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    sabarimala#stampede
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleTNPSC: குரூப் 2 பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு
    Next Article பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
    Editor TN Talks

    Related Posts

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.