Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலில் சிக்கி ஒருவர் பலி
    இந்தியா

    சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலில் சிக்கி ஒருவர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sabari
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கோயில் வளாகம் முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது.

    மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு சன்னிதானத்தில் ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்று வரும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஐயப்ப பக்தர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

    உடனடியாக அவருடன் வந்த சக பக்தர்கள், ஆம்புலன்ஸ் உதவிக் கோரி பம்பாவில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டதாக தெரிகிறது. ஆனால், தங்களுக்கு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணுடன் வந்தவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசு தவறிவிட்டதாக அந்த மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதனிடையே, சபரிமலையில் கூட்டம் கட்டுக்குள் இருப்பதாக டிஜிபி ரவடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், “நவம்பர் 17 ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். பக்தர்கள் வெர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்த நாளில் மட்டுமே வர வேண்டும். பலர் அதனை பின்பற்றுவதில்லை. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலையில் போதுமான காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததே பிரச்சனைக்கு காரணம். குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5,000 பேருந்துகள் மூலம் சபரிமலைக்கு பக்தர்கள் வந்துள்ளனர்.

    பம்பைக்கு வந்த அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான நாட்களில் இவ்வளவு கூட்டம் வருவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

    சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலியான நிலையில், முதியவர்களை பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து வர சபரிமலை தேவஸ்தான போர்டு பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    sabarimala#stampede
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleTNPSC: குரூப் 2 பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு
    Next Article பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
    Editor TN Talks

    Related Posts

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    December 26, 2025

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.