Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சித்தராமையாவுக்கு வீட்டில் விருந்து வைத்த டி.கே சிவகுமார்… முதலமைச்சர் பதவி பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
    இந்தியா

    சித்தராமையாவுக்கு வீட்டில் விருந்து வைத்த டி.கே சிவகுமார்… முதலமைச்சர் பதவி பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ktk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தனது வீட்டில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விருந்து வைத்திருப்பது, அந்த மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    கர்​நாட​கா​வில் சித்​த​ராமையா முதல்​வராக பதவி​யேற்று இரண்டரை ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்​கொடி உயர்த்தினர்.

    இதனால், காங்​கிரஸ் மேலிடத்​துக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது. காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, கட்​சி​யின் மூத்த தலை​வர்​களான சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மேலிட பொறுப்​பாளர் ரன்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஆகியோரிடம் ஆலோ​சனை நடத்​தி​னார்.

    இதனையடுத்து கடந்த நவ.30 அன்று முதல்வர் சித்தாரமையாவின் வீட்டுக்கு வருகை தந்த துணை முதல்வர் டி.கே.சிவகு​மார் அங்கு காலை உணவு சாப்பிட்டார். பின்​னர் இரு​வரும் தனி​யாக 15 நிமிடங்​கள் ஆலோ​சனை நட‌த்​தினர். அதன் பிறகு ‘தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை’ என இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்று (டிச.2) மீண்டும் சித்தராமையா, சிவகுமார் இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த முறை சிவகுமாரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளார் சித்தராமையா. அங்கு அவருக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது டி.கே. சிவகுமாரின் சகோதரரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே. சுரேஷும் உடன் இருந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு, கர்நாடக காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலைக் குறைப்பதற்கான முயற்சியாக எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.

    இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், “இரு தலைவர்களும் மீண்டும் சேர்ந்து காலை உணவு அருந்துவது வரவேற்கத்தக்கது. கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் குழப்பங்களுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.” என்று கூறியுள்ளார்.

    கட்சியில் நிலவும் இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் டெல்லியில் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். “தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க டெல்லியில் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSIR-ஐ எதிர்த்து அமளி… நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
    Next Article டிட்வா புயலால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு: தமிழக அரசு
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.