Close Menu
    What's Hot

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!
    இந்தியா

    சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sabarimalai gold 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார்.

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் சன்னிதானம் அமைந்திருக்கூடிய பகுதியில் 1998ம் ஆண்டு சன்னிதானம் மேற்கூரை மற்றும் வாசப்படி, துவார பாலகர் சிலை உள்ளிட்ட இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த 2019ல் கருவறைக்கு முன்பாக உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பிறகு, மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்ட போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த சம்பவத்தில் தேவசம்போர்டு மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தங்க தகடுகள் பதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

    இந்த வழக்கில் பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்டுள்ள முராரி பாபு மற்றும் வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா மாவட்ட குழு உறுப்பினருமான பத்மகுமார் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் இந்த மாத தொடக்கத்தில் 2 முறை ஆஜரானார். இந்தநிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு பத்மகுமாரிடம் இன்று விசாரித்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டார். சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் எட்டாவது குற்றவாளியாக பத்மகுமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாசாவில் மீண்டும் தாக்குதல்; 33 பேர் உயிரிழப்பு: போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்!
    Next Article லோக்கா இண்டஸ்ட்ரி ஹிட்டை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கல்யாணி பிரியதர்ஷன் !!!
    Editor TN Talks

    Related Posts

    இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி!. பிரதமர் மோடி பெருமிதம்!

    December 24, 2025

    திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்! பக்தர்கள் அதிர்ச்சி

    December 24, 2025

    “இந்தியாவில் உற்பத்தித் துறையை முழுமையாக ஊக்கமற்றதாக மாற்றிவிட்டது பாஜக!. ராகுல் காந்தி விமர்சனம்!.

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    Trending Posts

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.