Close Menu
    What's Hot

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!
    இந்தியா

    சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sabarimalai gold 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார்.

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் சன்னிதானம் அமைந்திருக்கூடிய பகுதியில் 1998ம் ஆண்டு சன்னிதானம் மேற்கூரை மற்றும் வாசப்படி, துவார பாலகர் சிலை உள்ளிட்ட இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த 2019ல் கருவறைக்கு முன்பாக உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பிறகு, மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்ட போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த சம்பவத்தில் தேவசம்போர்டு மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தங்க தகடுகள் பதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

    இந்த வழக்கில் பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்டுள்ள முராரி பாபு மற்றும் வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா மாவட்ட குழு உறுப்பினருமான பத்மகுமார் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் இந்த மாத தொடக்கத்தில் 2 முறை ஆஜரானார். இந்தநிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு பத்மகுமாரிடம் இன்று விசாரித்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டார். சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் எட்டாவது குற்றவாளியாக பத்மகுமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாசாவில் மீண்டும் தாக்குதல்; 33 பேர் உயிரிழப்பு: போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்!
    Next Article லோக்கா இண்டஸ்ட்ரி ஹிட்டை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கல்யாணி பிரியதர்ஷன் !!!
    Editor TN Talks

    Related Posts

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    June 1, 2026

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026

    டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை: பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய UPI அம்சம் அறிமுகம்..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    Trending Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.