மாலத்தீவு குறித்த பிரதமர் மோடியின் பதிவை Grok AI தவறாக மொழிப்பெயர்த்ததால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
AI உருவாக்கும் மொழிபெயர்ப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பும் வகையில், X தளத்தின் AI உதவியாளர் Grok ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தையொட்டி மாலத்தீவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட தூதரக பதிவை தவறாக மொழிபெயர்த்த Grok, அதில் அரசியல் ரீதியாக சுமத்தப்பட்ட சொற்களை சேர்த்துள்ளது.
அதாவது, குடியரசுத் தின வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு, மோடி அவர்களது மொழியிலேயே எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். அதில் இருநாடுகளின் நன்மைக்காக இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதை இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு செயல்படுவதாக க்ராக் மொழிப்பெயர்த்துள்ளது.
இருப்பினும், எக்ஸ் தளத்தில் பயனர்கள் அந்தத் தவறைக் சுட்டிக்காட்டி ஒரு விவாதம் தொடங்கிய பிறகு, க்ரோக் ஏஐ அந்த மொழிபெயர்ப்பைப் புதுப்பித்தது.சமீப காலங்களில் இந்தியா–மாலத்தீவு உறவுகள் பதற்றமான கட்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த தவறான மொழிபெயர்ப்பு தூதரக உணர்வுகளைத் தூண்டக்கூடிய அபாயம் இருப்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
