Close Menu
    What's Hot

    இன்று முதல் அண்ணாமலை பிரச்சாரம்!. வானதி மற்றும் எல்.முருகனுக்காக தீவிர வாக்கு சேகரிப்பு!.

    நாளையே கடைசி நாள்!. ஒரே நாளில் 2000 பேர்; இதுவரை 3000 வேட்புமனுக்கள் தாக்கல்!.

    தவெக வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!. விஜய் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியா-பாக். சண்டையை நிறுத்தியது நான் தான்… தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்..
    இந்தியா

    இந்தியா-பாக். சண்டையை நிறுத்தியது நான் தான்… தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்..

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025Updated:May 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250508 WA0061
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா பதிலடி நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக விமான கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு தலைமறைவான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

     

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியா மீது டிரோன் தாக்குதல் நடத்த, அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், உலக நாடுகளிடம் கடன் கேட்டது. தொடர்ந்து அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.

     

    இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறியிருந்தார். அத்தோடு செய்தியாளர்களிடம் பேசியிருந்த அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியதாகவும், இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து இந்தப் போரை தவிர்க்க செய்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்த கருத்தை மறுத்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தகம் குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என கூறியிருந்தார்.

    இந்த நிலையில், சவுதி அரேபியா சென்றுள்ள அதிபர் டிரம்ப், அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ”தான் பதவி ஏற்ற நாளிலேயே போரை விரும்பவில்லை எனக் கூறினேன். அதனால் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன். வர்த்தகத்தை முன்னிருத்தி இந்த உடன்பாட்டை எட்ட வைத்தேன். ’நண்பர்களே வாருங்கள் ஒப்பந்தம் செய்வோம், கொஞ்சம் வர்த்தகம் செய்வோம்’ என அவர்களிடம் கூறியதாக” டிரம்ப் கூறியுள்ளார்.

     

    ”அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்றேன். அவர்கள் இருவரும் மிகவும் சக்திவார்ந்த தலைவர்கள், மிகவும் வலுவான, நல்ல புத்திசாலி தலைவர்கள் ஆகையால் சண்டையை நிறுத்திவிட்டார்கள். சிறியதாகத் தொடங்கிய போர் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது” எனக் கூறியுள்ளார். நேற்று (13.05.2025) நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, டிரம்பின் இந்த அறிவிப்பு குறித்து வாய் திறக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது மௌனம் கலையும் போது, இந்த சர்ச்சை முற்றுப்புள்ளி பெற வாய்ப்புள்ளது.

    donald trump india attack pakistan india pakistan conflict ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் இந்தியா தாக்குதல் பாகிஸ்தான்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பதி போறீங்களா.. கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றம்.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
    Next Article பொள்ளாச்சி பாலியல் வழக்கு… இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய கருணாஸ்…
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்று முதல் அண்ணாமலை பிரச்சாரம்!. வானதி மற்றும் எல்.முருகனுக்காக தீவிர வாக்கு சேகரிப்பு!.

    நாளையே கடைசி நாள்!. ஒரே நாளில் 2000 பேர்; இதுவரை 3000 வேட்புமனுக்கள் தாக்கல்!.

    தவெக வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!. விஜய் அதிர்ச்சி!

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    Trending Posts

    இன்று முதல் அண்ணாமலை பிரச்சாரம்!. வானதி மற்றும் எல்.முருகனுக்காக தீவிர வாக்கு சேகரிப்பு!.

    April 5, 2026

    நாளையே கடைசி நாள்!. ஒரே நாளில் 2000 பேர்; இதுவரை 3000 வேட்புமனுக்கள் தாக்கல்!.

    April 5, 2026

    தவெக வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!. விஜய் அதிர்ச்சி!

    April 5, 2026

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.