Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இனியும் தாக்கினால்.. விளைவுகள் மோசமாகும்.. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை…
    இந்தியா

    இனியும் தாக்கினால்.. விளைவுகள் மோசமாகும்.. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை…

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 05 12 at 12.30.36 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

    பயங்கரவாதிகளையும், பயங்கரவாத முகாம்களையும் அழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் தாக்குதலில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப் மற்றும் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முதாசிர் அஹமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் குறித்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியநிலையில், பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய விமான தளங்கள், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்களை குறி வைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் அலை அலையாக அனுப்பிய ட்ரோன்கள் வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், மே 7 முதல் 10 வரை கட்டுப்பாட்டுக்கோட்டில் நடந்த பீரங்கி மற்றும் சிறிய ஆயுத துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 35 முதல் 40 பேர் வரை உயிரிழந்ததாகவும் ஜெனரல் ராஜீவ் கூறினார்.

    தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செயற்கைக் கோள் படங்களை காண்பித்து விளக்கமளித்தார். முரித்கே, பவல்பூர் பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் குறித்து விரிவான வீடியோ வெளியிட்டு அவர் விளக்கினார். தாக்குதலுக்கு முன்பும் அதன் பின்னரும் பயங்கரவாத முகாம்களின் நிலை குறித்து வீடியோவில் விளக்கப்பட்டது. ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மூலம் பெருமளவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட ஏர் மார்ஷல் பாரதி, தயார்நிலையில் இருந்த இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இலக்குகளுக்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார். பயணிகள் விமானங்களை பறக்க பாகிஸ்தான் அனுமதித்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்ததாகவும் பாரதி கூறினார்.

    தொடர்ந்து பேசிய வைஸ் அட்மிரல் என்.பிரமோத், இனியும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும் என்று எச்சரித்தார். இந்திய கடற்படையின் கேரியர் போர்க் குழு, மேற்பரப்புப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உடனடியாக முழு தயார்நிலையுடன் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தாக்குதல் நடந்த 96 மணி நேரத்திற்குள் அரபிக் கடலில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டதாகவும் பிரமோத் கூறினார். பெரும்பாலும் துறைமுகங்களுக்குள் அல்லது கடற்கரைக்கு மிக அருகில் உள்ள பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதாக தெரிவித்த அவர், இந்தியாவின் பதிலடி அளவிடப்பட்டு பொறுப்பான முறையில் இருந்ததாக குறிப்பிட்டார்.

    india attack pakistan india pakistan conflict india pakistan news India Pakistan War
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரியில் சடலமாக மீட்பு!
    Next Article பாக். விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை.! பிரதமர் மோடி பளீச்…
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025

    அந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.