Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது… 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அறிவிப்பு
    இந்தியா

    பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது… 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modiii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை வழங்கி எத்தியோப்பியா அரசு கௌரவித்திருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அரசு முறை பயணமாக ஜோர்டான் நாட்டிற்கு சென்றிருந்தார். அந்த பயணத்தை முடித்த அவர், அங்கிருந்து ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு சென்றுள்ளார். அங்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலியுடன் இரு நாடுகளுக்கிடையேயான உணவு, சுகாதாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்தியா – எத்தியோப்பியா நாடுகளின் உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காகவும், தொலைநோக்கு பார்வைகொண்ட உலகளாவிய அரசியல்வாதியாக வலம் வருவதற்காகவும் அவருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான, ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ என்ற விருதை விருதை அளித்து சிறப்பித்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் அபி அகமது அலி.

    உலகிலேயே முதன்முறையாக எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது கிடைத்திருப்பது குறித்து பேசிய அவர், இரு தரப்பு உறவுகளை பல ஆண்டுகளாக வளர்த்து வரும் இந்திய, எத்தியோப்பிய மக்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது பெற காரணமாக இருந்த 140 கோடி இந்தியர்களுக்கும் மோடி நன்றி தெரிவித்தார்.

    எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்றிருப்பது குறித்து மோடி தனது எக்ஸ் தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், “எத்தியோப்பியாவின் கௌரவ நிஷான்’ விருதை பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன். இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுவரை பல்வேறு நாடுகள் பிரதமர் மோடியை கௌரவித்து விருதுகள் வழங்கியுள்ள நிலையில், எத்தியோப்பியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற விருதானது அவருக்கு கிடைத்த 28-வது விருதாகும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூட்டை மாத்திய செந்தில் பாலாஜி!. கோவையில் களமிறங்க திட்டம்!.
    Next Article மெஸ்ஸிக்கு ரூ.11 கோடியில் வாட்ச் பரிசளித்த அம்பானி!
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    April 11, 2026

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.